Thursday, September 29, 2011

நீ பலசாலி என்பதால் எப்பொழுதும் யாருடனும் சண்டை போடலாம் என்று நினைப்பது தவறு.

Monday, September 26, 2011

திருமணம்

திருமணம் என்பது ஒரு போர்தான், என்னதான் திறமையான ஆளா இருந்தாலும், சேதாராம் இருக்கத்தான் செய்யும்.
மனைவியை சந்தோஷமாக வைத்து இருக்க. 1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும். 2. மனது புண்படும்படி பேசக்கூடாது. 3. கோபப்படக்கூடாது. 4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது. 5. பலர் முன் திட்டக்கூடாது. 6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது. 7. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். 8. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும். 9. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும். 10. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும். 11. வாரம் ஒரு முறையாவது மனம் விட்டுப் பேச வேண்டும். 12. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும். 13. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும். 14. ஒளிவு, மறைவு கூடாது. 15. மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது. 16. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும். 17. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும். 18. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும். 19. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டு, சொல்ல வேண்டும். 20. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும். 21. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும். 22. மனைவிக்குப் பிடித்தவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். 23. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது. 24. மனைவி வீட்டாரை குறை சொல்லக்கூடாது.

Thursday, September 22, 2011

சும்மா ....


ஊனம்,

உங்களை ஊனமுற்றவர்களாக ஒரு பொழுதும் நினைக்கமால், இதுக்கு பதிலா கடவுள் எனக்கு ஏதோ ஒரு பெரிய சக்தியையும் ஆற்றலையும் எனக்கு கொடுத்து இருக்கார் என்று நினைத்து, அதை கண்டுபிடித்து பட்டை தீட்டி ஜொலித்து வாழ்வில் வெற்றியை நோக்கி முன்னொருங்கள்.

உங்கள் வாழ்க்கையில் அக்கறை, நம்பிக்கை  உள்ளவர்களை உங்களோடு எப்பொழுதும் வைத்துக்கொள்ளுங்கள்.

நம்ம நடந்து போற பாதை, மிக சரியாக இருந்தால் அதில் முன்னாடியே யாரோ போன பாதை, அதனால் வேற பாதையை தேர்ந்தேடுத்து கலக்கலாம்.